வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து குறைந்தது 5 தலைவர்கள் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், ஹூரியத் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக், தேசிய மாநாட்டு கட்சியின் இரண்டு தலைவர்கள், மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு தலைவர்கள் ஆகியோர் இந்த உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த ஆகஸ்ட் 5-ஆம் நாள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-னை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து., அமைதி முறையை மனதில் வைத்து பள்ளத்தாக்கின் அரசியல் தலைவர்களை அரசாங்கம் வீட்டுக் காவலில் வைத்திருந்தது. இது காஷ்மீர் மீதான அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையைக் காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்தன.


எதிர்க்கட்சிகளிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றபோதிலும், அரசாங்கம் தனது படியிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது, குறிப்பாக முன்னாள் முதல்வரும், மூத்த மாநிலத் தலைவருமான ஃபாரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது அரசாங்கத்தின் தனிச்சிறப்பு.


ஒரு நபர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், அவர் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை மீறினால் அல்லது மக்களைத் தூண்ட முயன்றால், அவருக்கு எதிராக பொது பாதுகாப்பு சட்டம் (PSA) விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் தெளிவாகக் கூறியுள்ளது. அரசாங்க வட்டாரங்களின்படி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் கூறப்படும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் வரவிருக்கும் காலங்களில் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் தற்போது வீட்டு காவலில் இருக்கும், ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்கும் பட்சத்தில் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.