டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க் அருகில் இன்று காலை டி.டி.சி. மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு பேருந்துகள் அதிவேகத்தில் வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.