காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் தொடுத்த வழக்கில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி ஆற்றில் களைவு நீர் கலப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2-ஆவது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 


இந்த வழக்கிற்கான இரண்டாவது அறிக்கையில், காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலக்கப்படுவதில்லை என்றும் காவிரி ஆறு செல்லும் வழியில் கழிவு நீர் கலக்கபடுவதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் தெரிவித்துள்ளது.


மேலும், இந்த அறிக்கைக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டு வாரத்தில் பதில் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது!