பிரதமர் மோடியை குறித்து சசி தரூர் புதிய புத்தகம் ‘floccinaucinihilipilification’
காங்கிரஸின் எம்.பியான சசி தரூர் புதிய புத்தகத்தை எழுதி உள்ளார். அந்த புத்தகத்திற்கு, `முரண்பட்ட பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது இந்தியாவும்` என பெயரிட்டுள்ளார்.
காங்கிரஸின் எம்.பியான சசி தரூர் புதிய புத்தகத்தை எழுதி உள்ளார். அந்த புத்தகத்திற்கு, "முரண்பட்ட பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது இந்தியாவும்" என பெயரிட்டுள்ளார்.
காங்கிரஸின் எம்.பியான சசி தரூருக்கு புத்தகம் எழுதும் பழக்கம் உள்ளது. ஏற்கனவே இவர் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இந்நிலையில், நாட்டின் பிரதமரை குறித்து தான் ஒரு புத்தகம் எழுதி உள்ளதாகவும், அது விரைவில் வெளிவர உள்ளது. இப்போதே அமேசான் பக்கத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். அந்த புத்தகத்திற்கு "முரண்பட்ட பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது இந்தியாவும்" என ஏன் பெயரிட்டேன் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். இந்த புத்தகத்தில் மொத்தம் 400 பக்கங்கள் எழுதியுள்ளேன் என தனது டுவீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்த புத்தகம் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. புத்தகத்தின் விலை ரூ.599 ஆகும். இது ஆங்கில மொழியில் உள்ளது.