தலித் இளம் பெண் அரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் வைத்து 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே இதே 5 பேரால் கடந்த 2013-ம் ஆண்டும் இவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவம் வருமாறு:- கடந்த 2013 ஆண்டு பிவாடியில் வசித்து வந்த போது இந்த இளம் பெண்ணை 5 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்ட அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் நீதி மன்றத்துக்கு வெளியே இந்த வழக்கை முடித்து கொள்ள வேண்டும் என பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தை வலியுறுத்தி வந்து உள்ளனர். ஆனால் இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இதை தொடர்ந்து குற்றவாளிகள் அவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்து உள்ளனர். இதனால் பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பம் ரோஹ்தக் நகருக்கு மாறி உள்ளனர். 


இந்த நிலையில் கல்லூரியில் படித்து வந்த இளம் பெண்ணை கடந்த புதன் கிழமை 5 பேரும் கடத்தி சென்று உள்ளனர். பின்னர் அந்த் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து உள்ளனர். அவர் மயங்கிய பின் அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை சுக்புரா சவுக் என்ற இடத்தில் போட்டு விட்டு சென்று விட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.


அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அனில் என்கிற பிட்டு, ஆகாஷ், மவுசம் குமார், ராஜூ என்கிற ஜக்மோகன், மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.