அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர் அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த புதன்  கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவரால் இனவெறியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார் ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா. மேலும் உடன் பணிபுரியும் மற்றொரு என்ஜினீயர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில், கொல்லப்பட்ட ஸ்ரீனிவாஸின் உடல் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு இன்று கொண்டு வரப்படுகிறது. ஐதரபாத் கொண்டு வரப்படும் அவரது உடல் பின்னர், அவரது சொந்த ஊாரான பச்சுபள்ளி என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 


இதையடுத்து காலை 11.30 மணிக்கு ஜுப்ளி ஹில்ஸில் உள்ள மகாபிரஸ்தனம் மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.