ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் கந்த்முல்லா பகுதி அருகே ராணுவ முகாம் உள்ளது. இம்முகாமில் இந்திய வீரர்கள் கண்காணிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இதே மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஸாகூர் தாகுர் என்பவர் இம்முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.


இன்று அதிகாலை முதல் ஏ.கே-47 ரக துப்பாக்கியுடன் ஸாகூர் தாகுர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


மேலும் ராணுவத்தின் சார்பிலும் தாகுர் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.