கரீம்நகர்: தெலுங்கானா (Telangana) கிராமத்தில் இருந்து ஒரு ஆச்சரியமான செய்தி வெளிவந்துள்ளது. இங்கே, ஒரு மகன் தனது வேலையின் பேராசையால் தந்தையை கொன்றான். கொலையாளியின் இந்த சம்பவத்தை அவனது சகோதரரும் தாயும் ஆதரித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலையாளி வெறும் 25 வயது மற்றும் பாலிடெக்னிக் டிப்ளோமா (Polytechnic Diploma) படித்திருக்கிறார். அந்த நபர் பெடப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்கிறார்.


இந்த நபர் கோத்தூர் கிராமத்தில் (Kothur village) தூங்கிக் கொண்டிருந்த தனது 55 வயது தந்தையை கொலை செய்தார். இந்த சம்பவம் மே 26 அன்று நடந்தது. அவரின் கொலைக்கு அவரது தாயும் சகோதரரும் ஆதரவளித்தனர்.


இதையும் படியுங்கள் | தனது Tik Tok வீடியோவுக்கு போதிய அளவு லைக் வராததால் இளைஞர் தற்கொலை


தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அவர் மாரடைப்பால் (Heart Attack) இறந்துவிட்டார் என்ற பொய்யை குடும்பத்தினர் பரப்பினர், ஆனால் இறந்தவர் இறுதி சடங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​சிலர் சந்தேகங்களை வெளிப்படுத்தினர் மற்றும் புகார் அளிக்குமாறு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தனர்.


இந்த வழக்கின் விசாரணையை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இப்போது இந்த சம்பவத்தின் உண்மை முன்னுக்கு வந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து பேசிய ராமகுண்டத்தின் (Ramagundam) போலீஸ் கமிஷனர், "தனது தந்தையின் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பெற, அந்த நபர் தனது தந்தையை கொன்றார்" என்றார். எஸ்.சி.சி.எல் ஒரு பெரிய நிலக்கரி சுரங்கமாகும். இங்கு பணிபுரியும் ஊழியர் இறந்தால், ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது தந்தை கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றார்.


இதையும் படியுங்கள் | துணியை மாற்றிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்


மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மொபைல் போன்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இறந்தவரின் மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், தாய் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.