பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியின் மகன், தனது 12 வகுப்பு தேர்வில் 88% மதிப்பெண் பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவின் மகன் கலிப் குரு, ஜம்மு மற்றும் காஷ்மீர் கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி தேர்வில் முதன்மை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.


2001-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அப்சல் குரு அவரது குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.


இவரது மகன் கலிப் குரு, இன்று வெளியான தேர்வு முடிவில் 88% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.



இதனையடுத்து பாரமல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு, நண்பர்கள் மற்றும்  ஊடகங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.