இன்று புதிய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து நசீம் ஜைதி கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். இதனை அடுத்து தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ஏ.கே.ஜோதி, தற்காலிகமாக தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்தார்.


இந்நிலையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு முன்னாள் தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் சுனில் அரோராவை மத்திய அரசு புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது.