பிரியா வாரியருக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.


முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் பாடலில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் இவர் நடித்திருப்பதாக தெரிவித்து தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் குழு IPC பிரிவு 295A-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.



இந்நிலையில் இன்று இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, கான்வில்கர் மற்றும் சந்திரசௌத் ஆகியோற் அடங்கிய அமர்வு, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் பாடல் காட்சியில் மத உணர்வினை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறவில்லை, கேலிக்கை விதிகளின் அடிப்படையிலேயே திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து வழக்கினை தள்ளபடி செய்தனர்.