குஜராத்தில் நகை வியாபாரி ஒருவர் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் உருவம் பொறித்த நகைகளை விற்பனைக்கு வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் தாண்டியா திருவிழாவை முன்னிட்டு 5 கிராம் முதல் ஒரு கிலோ வரை தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், நகைக் கட்டிகளில் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் உருவங்களைப் பொறித்து விற்பனைக்கு வைத்துள்ளார்.


இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கூறும்போது, மோடியின் உருவம் பொறித்த நாணயத்தை பலரும் முன்பதிவு செய்து வாங்கிச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மோடி தங்களுக்கு கடவுள் போன்றவர் என்று குறிப்பிட்ட நகைக் கடை உரிமையாளர், இந்த நகைகளை பூஜை அறையில் வைத்து பூஜிக்க விரும்புவதாகவும் கூறினார்.