இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது, அவர் மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் கே.நடராஜன் வரும் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. 


இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.


இந்நிலையில் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., 



இந்திய கடலோர காவல்படை புதிய இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு நியமித்திருப்பது நம் தமிழகத்திற்கு கிடைத்த பெரும் சிறப்பாகும். கே.நடராஜன் அவர்களின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.