சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு Fastag முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 


இதைத் தவிர்க்க கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. Fastag கட்டண வசூல் முறை ஜனவரி 15-ஆம் தேதியிலிருந்து கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது.


FASTag என்றால் என்ன?


FASTag என்பது உங்கள் வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஒட்டப்பட வேண்டிய சிறிய மறுபயன்பாட்டு குறிச்சொல் ஆகும். இது RFID தொழில்நுட்பத்தில் இயங்குகிறது மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகவோ அல்லது உங்கள் FASTag இணைக்கப்பட்ட பணப்பையிலிருந்தோ உடனடி பணமில்லா கொடுப்பனவுகளை அனுமதிக்கிறது. உங்கள் வாகனம் ஒரு கட்டண வாயிலைக் கடந்ததும், பணம் எடுக்கப்பட்டதற்கான விவரங்களுடன் ஒரு எஸ்எம்எஸ் கிடைக்கும்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.