எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு; அவரை கைது செய்ய தடையில்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வேறு ஒருவர் போட்ட பதிவை தாம் தவறாக பகிர்ந்து விட்டதாகவும், அதற்காக அனைத்து பெண் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 


இதை தொடர்ந்து அவர் மீது தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் அளித்த புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எஸ்.வி சேகர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த, மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி சேகருக்கு உத்தரவிட்டது.