ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினரின் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டனர். இந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். உள்ளூரைச்சேர்ந்த ஒரு வயதான பெண்மணியும் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அதிகாலை வேளையில் நிலவிய அடர்ந்த இருட்டை பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பியதாக கூறப்படுகிறது.


பிப்ரவரி மாதத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவது இது 3-வது முறையாகும். முன்னதாக காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாகிச்சண்டையில் 6 ராணுவ வீரர்கள் ஒரு மேஜர் ஆகியோர் பலியாகினர்.