ஊர் தலைவருக்கு உடல் நலம் சரியாக ஆண்களின் முன் பெண்கள் நிர்வாணமாக நடந்த தான் ஆகும் என கூறி சொல்லிய சாமியாடி.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கிராமத்து தலைவரின் குடும்பத்துக்கு சூனியம் வைத்துள்ளதாக ஒரு மந்திரவாதி கூறியதை நம்பி ,மூன்று பெண்களையும் ,ஒரு ஆணையும் ஊரார் முன்னிலையில் நிர்வாணமாக நடக்க வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா பகுதியில் நாராயன்பூர் கிராமத்தில் அந்த ஊர் தலைவரின் இரண்டு மகள்களுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர் தலைவர் ஒரு ஜோசியரிடம் கேட்டபோது, அவர் அந்த ஊரிலுள்ள மூன்று பெண்களும் ஒரு ஆணும் சேர்ந்து அவருக்கு சூனியம் வைத்துள்ளதாகவும், அதை சரிசெய்ய அவர்களை நிர்வாணமாக ஊரார் முன்னிலையில் வலம்வர வேண்டுமென்றும் கூறியுள்ளார். 


ALSO READ | இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செயலாம்!!


இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊர் தலைவர், உடனே ஊர் மக்களை கூட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். அதன்படி வியாழக்கிழமை இரவு அந்த ஊரிலுள்ள 50 ஆண்களுக்கு மத்தியில் அந்த மூன்று பெண்களையும், ஒரு ஆணையும் நிர்வாணமாக நடந்து போக சொன்னார்கள். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் பொது மக்களில் சிலரும், வார்டு கவுன்சிலரும் இதை தடுக்க முற்ப்பட்டனர். 


அப்போது அந்த ஊர் கலைவரின் ஆட்கள் அவர்களை தாக்கினர் .இதனால் இந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்தும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்களுக்கும் ஆணுக்கும் உடைகளை வழங்கி அவர்களை மீட்டார்கள். பிறகு இந்த சம்பவத்திற்கு காரணமான இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும், காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.