ஜம்முவில் சி.ஆர்.பி.எஃப் ரோந்துப் படையை பயங்கரவாதிகள் இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இரண்டு நபர்கள் உயிரிழந்தனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்முகாஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எஃப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் படையினர் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 


இத்தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் பலியானார். மேலும், 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் பதற்றம் நிலவுவதையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தப்பியோடிய கும்பலை தேடும் பணியில் தீவிரப்படுத்தியுள்ளனர்.