சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் ஜங்லாவில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் பலியானார்கள்.


அதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 15, ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் 5 நக்சலைட்டுகலும் இரண்டு போலீசாரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்நிலையில் தற்போது, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் ஜங்லாவில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருவதாக  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.