சமீப காலமாக பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர் மோதல் ஏற்ப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் ஒரு பகுதியாக தற்போது,ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஷோபியானாவில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஷோபியான் சந்திப்பில் உள்ள விஜயம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள்  இருவர் சூட்டுக் கொல்லப்பட்டனர்.