மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எ.ஸ்டி. திட்டங்களுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதால் பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பொருளாதாரத்தை மையமாக திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுமா? கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரியில் ஏதாவது மாற்றம் செய்யப்படுமா? ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் எந்த மாதிரியான பட்ஜெட் அறிவிக்கப்படும் போன்ற மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.


மேலும் இந்த வருடம் எட்டு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதை மனதில் வைத்து தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.


யூனியன் பட்ஜெட் 2018: பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்ன? ஒரு பார்வை!!


ரயில்வே பட்ஜெட்


இந்த முறை ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக பயணிகள் பாதுகாப்பு இருக்கும் எனவும், ரயில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்தில், ஆளில்லா லெவல் க்ராஸிங்குகளை நீக்கவும், ரயில் தடங்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்படும் என ம்,மத்திய அரசு கூறியுள்ளது. ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 8 கேமராக்கள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தெரிவித்துவிடும். கடந்த ஆண்டில் அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.