கோரக்பூர்: மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, உ.பி மாநிலம் கரக்பூர் அருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய ரயில்வே மற்றும் தகவல் துறையின் இணையமைச்சரான மனோஜ் சின்ஹா, உ.பி மாநிலம் கரக்பூர் அருகேயுள்ள தபதி ஆற்று பாலம் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த நடைபாதைவாசியின் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரின் பிரேக்கை திடீரென அழுத்தினார்.இதில் பின்னால் வந்த கார் அமைச்சரின் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


உத்தர பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் நகர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் மத்திய மந்திரி மனோஜ் சின்கா தனது காரில் வந்து கொண்டிருந்தார். நேற்று மாலை 7.15 மணியளவில் தாப்தி ஆற்றுப்பாலம் அருகே வந்த போது மனோஜ் சின்காவின் கார் விபத்தில் சிக்கியது. 


இந்த விபத்தில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.