உத்திரபிரதேச மாநிலத்தில் தீவின செடி வெட்டும் இயந்திரத்தில் பெண் ஒருவர் சிக்கி அவரது தலை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேச மாநிலம் பதாரியா பகுதியை சேர்ந்தவர் ருக்மா தேவி(35). இவர் தனது கால்நடைகளுக்கு தீவினம் எடுத்துவந்து அதனை தீவன செடி வெட்டும் இயந்திரத்தில் வைத்து வெட்டியுள்ளார். அப்போது இயந்திரத்தில் எதிர்பாரா விதமாக சிக்கிய அவரது புடவை அவரை இயந்திரத்தினுள் இழுத்துச்சென்றது.


தன் கட்டுப்பாட்டினை இழந்த பெண்மணி தன்னை அறியாமல் இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்டார். இச்சம்பவத்தின் போது இவரது தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 


இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு ஊர்மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவயிடத்தில் மீட்கப்பட்ட இவரது சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.