உத்ராகாண்ட் மாநிலம் ருத்ரபூர் பகுதியின் MLA பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ருத்ரபூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் துக்ரல், தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


உத்தம் சிங் நகரில் சாலை விதிகளை மீறி சென்ற இளைஞர்கள் இருவரை தட்டிக்கேட்ட பெண் காவலரிடம் ராஜ்குமார் துக்ரல் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். வெள்ளிகிழமை மாலை நடைப்பெற்ற இச்சம்பவம் குறித்து இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனிதா கௌய்ராலா வெளிப்படுத்தியுள்ளார்.



சாலை விதிகளை மீறிய இளைஞர் ராஜூ காவல் துறை அதிகாரிகளிடம் தனது வாகனப் பதிவு பத்திரங்களை காண்பிக்க மறுத்துள்ளதாகவும், இதன் காரணமாக எழுந்த பிரச்சனையில் ராஜூ, MLA ராஜ்குமாரினை தனக்கு ஆதரவு குரல் கொடுக்க அழைத்துள்ளார் என கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றது.