கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமையால் 10 வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 25 வயதான நிஷா மிதேஷ் கங்கர் தனது போரிவலி மேற்கு இல்லத்தின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த நிஷா தனது தந்தைக்கு ஒரு தற்கொலை குறிப்பு செய்தியை அனுப்பியுள்ளார். இந்த செயலுக்கு அவரின் கணவர் மற்றும் மாமியார் தான் காரணம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து, கஸ்தூர்பா போலீசார் FIR பதிவு செய்து, அவரது கணவர் மிதேஷ் மற்றும் மாமனார் லக்ஷ்மிகாந்தை வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் மாமியார் நிதா இன்னும் தலைமறைவாக உள்ளார். போரிவாலி கிழக்கின் மெயின் கார்ட்டர் சாலையில் ஜெய் சாமுண்டா சொசைட்டியில் வசிப்பவர் நிஷா. அவர் மிதேஷை கடந்த 2017 ஆமா ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்கொலைக் குறிப்பில், தனது மாமியார் தன்னை சித்திரவதை செய்ததாகவும், வீட்டைப் பூட்டிக் கொண்டு ரூ.2 கோடி கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.


இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில்; செவ்வாய்க்கிழமை மதியம் 12.45 மணியளவில், நிஷா தனது வீட்டு பால்கனியின் 10 வது மாடியில் இருந்து குதித்தார். கஸ்தூர்பா காவல் நிலைய மூத்த ஆய்வாளர் நம்தியோ ஷிண்டே, "நாங்கள் மிதேஷ் மற்றும் மாமனார் லக்ஷ்மிச்சந்தை கைது செய்துள்ளோம். நாங்கள் அவரது மாமியார் நிதாபனைத் தேடி வருகிறோம். தற்கொலை மற்றும் வரதட்சணைக்கு உட்படுத்தப்பட்ட தொடர்புடைய பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.