மைசூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் பிறந்தநாளினை கொண்டாடுகையில் ஏற்பட்ட தீ-விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சன்ஜனா(21), இவர் தனது 21-வது பிறந்தநாளினை பிரபல விடுதி ஒன்றில் கொண்டாடியுள்ளார். விழா அறை முழுவதம் ஹைட்ரஜன் பலூன்களால் அலங்கரக்கப்பட்டு இருந்தன.



பிறந்தநாள் கேக்கினை வெட்டுவதற்கு முன்னாதக மெழுவதத்தினை அனைக்க முற்படுகின்றார். அப்போது அங்கிருந்து செல்லும் தீ கங்கு ஹைட்ரஜன் பலூனில் பட்டு முழுவதும் வெடிக்கின்றது.


இந்த நிகழ்வின் மூலம் விழா பகுதி விபத்து இடமாக மாறுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உடலின் 50% எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இந்த நிகழ்வானது முன்னதாக நடைப்பெற்ற போதிலும், சமூக வலைதளங்களில் தற்போதே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.