டெல்லி நிஹல் விகார் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு டெல்லி, நிஹல் விகார் பகுதியின் சிவராம் பார்க் காலனியை சேர்ந்தவர் சாருநிஷா(21). இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அப்பகதி காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாருநிஷா சடலத்தை மீட்டெடுத்தனர்.


முதற்கட்ட விசாரணையில் பலியான சாருநிஷா-விற்கும் அவரது கணவருக்கும் தொடரந்து பிரச்சணை இருந்த வந்ததாக தெரிகிறது. புதுமன தம்பதிகளான இவர்கள் இருவரும் ஒரு ஆண்டிற்கு முன்னரே இப்பகுதிக்கு வந்ததாவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் நிகழும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்ட சாருநிஷாவின் உடலில் எவ்வித காயத் தழும்புகளும் தென்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பட்ட சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


பலியான சாருநிஷாவின் கணவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் முழு விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்களை தெரிவிக்க முடியும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்!