Zee News AI Exit Poll 2024: 18வது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மார்ச் மாதம் 16ஆம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி மக்களும் கடும் எதிர்பார்ப்பில் இருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. அதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 350+ இடங்களையும், இந்தியா கூட்டணி 110+ இடங்களையும் வெல்லும் என அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்து வந்தன. ஆனால் இப்போது வந்திருக்கும் நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 290+ இடங்களிலும், இந்தியா கூட்டணி 230+ இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 


தவிடுபொடியான பிற கருத்துக்கணிப்புகள்


அதாவது, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தற்போது தவிடுபொடியாகிவிட்டது எனலாம். Exit Poll முடிவுகளின் தாக்கதால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை நேற்று அடைந்தன நிலையில், இன்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தால் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளன. எனவே, பலரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நமது Zee News ஊடகத்தின் AI Exit Poll முடிவுகள், தற்போதைய நிலவரத்தை கச்சிதமாகவும், துல்லியமாகவும் கணித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க |  மத்தியில் ஆட்சி அமைக்க அடுத்தடுத்து காய் நகர்த்தும் India Alliance.. கலக்கத்தில் BJP


Zee News ஊடகத்தின் AI Exit Poll முடிவுகள் கீழ் வருமாறு: 


தேசிய ஜனநாயக கூட்டணி = 305-315 


இந்தியா கூட்டணி = 180-195


மற்றவை = 38-52 


தற்போதைய முன்னிலை நிலவரம் கீழ் வருமாறு:  


தேசிய ஜனநாயக கூட்டணி = 295


இந்தியா கூட்டணி = 229


மற்றவை = 19



துல்லியமான முடிவுகள்


இந்த புள்ளிவிவரங்களை பார்த்தன் மூலமே உங்களுக்கு புரிந்திருக்கும், நமது Zee News ஊடகம் AI Exit Poll முடிவுகள் ஏறத்தாழ துல்லியமாகவும், சார்பற்ற வகையிலும் இருந்தது. இதன்மூலம், Zee News AI Exit Poll பெரும் நம்பகத்தன்மையை பெற்றிருக்கிறது எனலாம். 


நமது Zee News ஊடகம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொண்டது. குறிப்பாக இந்த கருத்துக்கணிப்பு 10 கோடி மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் எந்த சார்பும் அற்ற வகையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதனாலேயே இவ்வளவு துல்லியமாக முடிவுகள் வந்திருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Chandrababu Naidu : ஆந்திராவின் புதிய முதல்வர் சந்திரபாபு நாயுடு! அறிந்ததும் அறியாததும்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ