IPL 2018 தொடரின் 11-வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் நேற்று மாலை மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பேட்டிங்செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சன்ஜு சாம்சன் ஆட்டமிழக்காமல் 92(45) குவித்து அணிக்கு பலம் செர்த்தார். இதில் 10x6's அடங்கும்.


பெங்களூரு அணி தரப்பில் சாஹல், வோக்ஸ் தல இரண்டு விக்கெட்டுகளை குவித்தனர். 


இதனையடுத்து, 218 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களே எடுக்க முடிந்தது. 


இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது. எனவே, 3-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.


மேலும், இந்த சீசனில் டாஸில் தோற்று அதன் பிறகு அந்த போட்டியில் வெற்றி கண்ட முதல் கேப்டனாக ராஜஸ்தானின் ரஹானே திகழ்கிறார்.