கர்நாடக தேர்தலில் 112  தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை கட்சியாக பாஜக உருவெடுத்த நிலையில் எடியூரப்பா அங்கு மீண்டும் முதலமைச்சராகிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.


இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 121 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.. தற்போது தேவையான 113 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. இதையடுத்து மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதையடுத்து, பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் ஆட்சி அமைக்கும் முனைப்பில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.