இந்தியர்கள் ஒவ்வொரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இமாச்சலப் பிரதேசம் குலுவில் சுமார் 5000 பெண்கள் நடன நிகழ்ச்சியை நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


பாரம்பரிய முறையில் உடை அணிந்து நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. 


இமாச்சல் பிரதேசம் குல்லுர் நகரில் உள்ள தால்புர் மைதானத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, 5000 பெண்கள் பங்கேற்று பாரம்பரிய நடனம் ஆடினர். மிக பிரமாண்டதாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது, 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.