இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் சமீபத்தில் தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்தார். ஏற்கனவே பேட்மிண்டன் உலகில் பல்வேறு சாதனை புரிந்த பி.வி.சிந்து, இந்த சாதனைக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் பேசப்பட்டார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் விரிந்தது. 


இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மலைச்சாமி, பி.வி.சிந்துவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த மனுவை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் அளித்துள்ளார். 


அந்த மனுவில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட தான், பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகக் கூறியுள்ளார். பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன் என்று உறுதிபடக் கூறும் முதியவர், அந்த வீராங்கனை எங்கிருந்தாலும் விடப்போவதில்லை. அவரை தூக்கிவந்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.