7வது ஊதியக் கமிஷன் புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 2023-ம் ஆண்டில் லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் பம்பராக உயர்த்தப்பட உள்ளது. டிஏ அதிகரிப்புடன், ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. மத்திய அரசு புதிய ஆண்டில் டிஏ மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, புத்தாண்டில் ஊழியர்களுக்கு இரட்டிப்பு நற்செய்தி கிடைக்கப் போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த கோரிக்கை 


ஃபிட்மென்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். தற்போது, ​​ஊழியர்களுக்கு 2.57 சதவீதத்தின் படி ஃபிட்மென்ட் ஃபாக்டர் வழங்கப்பட்டு வருகிறது. அதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும்


ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்ந்தால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நேரடியாக ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த முடிவால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிகபட்ச உயர்வு இருக்கும். 


2016-ல் ஊதியத்தில்  நல்ல ஏற்றம் இருந்தது 


முன்னதாக, அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தியது. அதே ஆண்டு முதல் ஏழாவது ஊதியக் குழுவும் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.6000 லிருந்து நேரடியாக ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச அடிப்படை சம்பளம், 90,000 ரூபாயில் இருந்து 2.5 லட்சமாக அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு 


ஜனவரியில் டிஏ அதிகரிக்கும்


இதனுடன், ஜனவரி மாதத்தில், டிஏ-வை அரசு அதிரடியாக உயர்த்தப் போகிறது. ஜனவரி மாதத்தில் ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும், அதன் பிறகு டிஏ 42 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உள்ளது.


லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்


சமீபத்தில் அகவிலைப்படியை  அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 38 சதவீதமாக இருந்தது. அரசின் இந்த முடிவால் 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பெரும் பலன் அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | 7th pay commission: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய புத்தாண்டு பரிசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ