7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் மிகப்பெரிய பரிசு வழங்கப்பட்டது. அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. இனி வரும் நாட்களில் அவர்களுக்கு இன்னும் பல பரிசுகள் காத்திருக்கின்றன. இவற்றில் ஒன்று ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர் அதிகரிப்பாகும். அரசு அடுத்த ஆண்டுக்குள் இதை அதிகரிக்கக்கூடும். இதனால் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட்ர் ஃபாக்டர் குறித்து ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும், அதை அடுத்த ஆண்டுக்குள் அதிகரிக்கும் முடிவு எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மிகப்பெரிய அளவில் உயரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து பெரிய அறிவிப்பு வெளியாகலாம்


2023 ஆம் ஆண்டில் ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டரில் அதிகர்ப்பு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், 2024 ஆம் ஆண்டில் அரசு அதை மதிப்பாய்வு செய்து அதிகரிக்கலாம். ஆனால், இது குறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரை தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. செலவினத் துறை இப்போது இது குறித்து ஆலோசிக்கலாம். அதன் பிறகு தனது பரிந்துரைகளை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பலாம். 


புதிய ஊதியக்குழு


அடுத்த ஆண்டு புதிய ஊதியக் குழுவும் அமைக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், அந்த நேரத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்ட்ர் பற்றிய முடிவும் சாத்தியமாகும். அடுத்த ஊதியக்குழு உருவாகும் முன், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாது என நிபுணர்கள் கூறி வருகிறார்கள். அடுத்த சம்பள கமிஷன் எப்போது வரும் என்று சொல்வதும் கடினம். எனினும், அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்க அரசு முயற்சித்து வருகிறது.


ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏன் எழுந்துள்ளது?


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் ஃபாக்டர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் (அடிப்படை சம்பளம்) எவ்வளவு உயர்த்தப்படும் என முடிவு செய்யப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கொடுப்பனவுகள் தவிர, அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் காரணி மூலம் மட்டுமே அதிகரிக்கிறது. கடந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டது. ஆனால், ஃபிட்மென்ட் ஃபாக்டரை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களின் கோரிக்கை எழுந்தது. இது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் நல்ல அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அரசு தரப்பிலிருந்து இது குறித்து தெளிவாக இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், நிதி அமைச்சகம் புதிய அப்டேட் வெளியீடு


ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?


7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம், 7வது ஊதியக் குழுவின்ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆல் பெருக்கி கணக்கிடப்படுகிறது. 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்த பிறகு, 6வது ஊதியக்குழுவின் ஊதியக்குழுவில் தர ஊதியம் சேர்த்து அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது. இதில், தற்போதைய நுழைவு நிலை ஊழியரின் ஊதியம் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆல் பெருக்கி கணக்கிடப்பட்டது. அதில் இருந்து ஊழியர்களின் பே பேண்டின் படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. 


உதாரணத்திற்கு


6வது சிபிசி பே பேண்ட்: PB 1
கிரேட் பே: ரூ. 1,800
கரண்ட் எண்ட்ரி பே: ரூ. 7,000
7வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் பேக்டரைப் பயன்படுத்திய பின் எண்ட்ரி பே: 7000 x 2.57 = ரூ. 18,000.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 மடங்கு இருந்தால் ஊதியம் எப்படி இருக்கும்? 


6வது சிபிசி பே பேண்ட்: PB 1
கிரேட் பே: ரூ. 1,800
கரண்ட் எண்ட்ரி பே: ரூ. 7,000
7வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் பேக்டரைப் பயன்படுத்திய பின் எண்ட்ரி பே: 7000 x 3 = ரூ. 21,000.


சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும்?


மத்திய அரசு ஊழியர்கள் தற்போதைய முறையில் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பெறுகின்றனர். இதன் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இதை 3 ஆக உயர்த்தினால் அடிப்படை சம்பளம் ரூ.21000 ஆகும். மாறாக, 3.68 ஆக உயர்த்தினால், சம்பளம் ரூ.25,760 ஆக உயரும். தங்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று ஊழியர்கள் விரும்புகிறார்கள்.


குறிப்பு: ஃபிட்மெண்ட் பேக்டரில் சம்பள பேண்டை மாற்றிய பிறகும் சம்பளம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே ஒரு எடுத்துக்காட்டுக்காக மட்டுமே அடிப்படை கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! 3 மாத நிலுவைத் தொகை குறித்து அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ