7வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்: ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பண்டிகைக் காலங்களில், இவர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு போன்ற வடிவங்களில் மத்திய அரசிடமிருந்து ஒரு பெரிய பரிசைப் பெற முடியும். நவராத்திரி அல்லது தீபாவளிக்கு முன்னதாக, இவர்களின் டிஏ மற்றும் டிஆர் உயர்வு (அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம்) குறித்த பெரிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என அரசு வட்டாரங்களில் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மத்திய ஊழியர்களுக்கு (Central Government) 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை அவர்களின் டிஏ மற்றும் டிஆர் மூன்று அல்லது நான்கு சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், இவர்கள் பெறும் அகவிலைப்படி 45 அல்லது 46 சதவீதமாக உயரும். இதன் காரணமாக, ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படலாம்.


மேலும் படிக்க | 4 விதமான ஆதார் கார்டுகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? வித்தியாசங்கள் இதுதான்!


பொதுவாக மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை மாற்றி அமைக்கிறது. முதலாவது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது, இரண்டாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக, ஹோலி பண்டிகைக்கு முன்பு, மார்ச் 24 ஆம் தேதி அன்று, அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தியது, இது ஜனவரி 1, 2023 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


மத்திய அரசு கடந்த இரண்டு முறை ஊழியர்களின் அகவிலைப்படியை தலா நான்கு சதவீதம் உயர்த்தி வருகிறது. இவ்வாறான நிலையில், பணவீக்க புள்ளிவிபரங்களைக் கருத்தில் கொண்டு, இம்முறையும் அகவிலைப்படியை நான்கு சதவீதமாக உயர்த்துமாறு ஊழியர்கள் கோருகின்றனர். தற்போது அரசின் அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும்.


தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட AICPI (சிபிஐ-ஐடபிள்யூ) தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு அதிகரிக்கிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து இந்த உயர்வு வழங்கப்படுகிறது.


மத்திய அரசு அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) அடிப்படையில் மதிப்பாய்வு செய்து AICPI தரவுகளின் (All India Consumer Price Index) அடிப்படையில் அதிகரிக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பதால் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்வில் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதே இதன் நோக்கம். எனவே அகவிலைப்படியின் முதல் உயர்வு ஜனவரி மாதத்திலிருந்தும், இரண்டாவது ஜூலை மாதத்தில் இருந்தும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பண்டிகைக் காலத்தில் கூடுதல் சலுகைகளைப் பெறுவார்கள். தற்போது நாட்டில் சுமார் 47.58 லட்சம் மத்திய ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


தற்போதுவரை, பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என, 1 கோடிக்கும் அதிகமானோர் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். விரைவில் அகவிலைப்படியை உயர்த்தி, அறிவிப்பு வெளியானால், ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டு தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ