புதுடெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாடிக்கையாளர்களுக்கான ஆதார் சரிபார்ப்பு (Aadhaar Authentication) தொகையை ரூ .20 லிருந்து ரூ .3 ஆக குறைத்துள்ளது. NPCI-IAMA ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய ஃபின்டெக் விழாவில் உரையாற்றிய போது, ​​UIDAI தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சவுரப் கர்க் இதுபற்றி தகவல் அளிக்கையில், நிதி தொழில்நுட்பத் துறையில் ஆதார் பெறுவதற்கு மகத்தான வாய்ப்பு இருப்பதாக கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெரிஃபிகேஷன் தொகை ரூ .20 லிருந்து ரூ .3 ஆக குறைக்கப்பட்டது


சவுரப் கர்க் கூறுகையில், “ஒரு வெரிஃபிகேஷனுக்கான கட்டணத்தை ரூ .20 லிருந்து ரூ .3 ஆக குறைத்துள்ளோம். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பை பல்வேறு நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கண்ணியமுள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்க இந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது அவசியமாகும்.” என்றார்.


99 கோடி மக்கள் பயன்படுத்தினர்


இதுவரை, 99 கோடி e-KYC க்கு (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) ஆதார் (Aadhaar) அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. UIDAI பயோமெட்ரிக்ஸ் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாது. மேலும் அதன் அனைத்து பங்காளிகளும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பராமரிக்க வேண்டும் என்றும் UIDAI எதிர்பார்க்கிறது.


ALSO READ: ஆதார் கார்ட் இருக்கா? அப்போ சுலபமா தனிநபர் கடன் பெற முடியும்: முழு விவரம் இதோ


புதிய ஆதார் அட்டையைப் (Aadhaar Card) பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், பெயர், முகவரி, பிறந்த தேதி, மின்னஞ்சல் போன்றவற்றில் திருத்தம் போன்ற ஆதார் புதுப்பிப்புகளை செய்ய நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மக்கள்தொகை புதுப்பிப்புக்கு (Demographic Update) ரூ .50 மற்றும் பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு (Biometric Update) ரூ .100 செலுத்த வேண்டும்.


ஆதார் அட்டை நாட்டில் குடிமக்களின் முக்கியமான ஆவணமாகும்


நாட்டில் ஆதார் அட்டை ஒரு கட்டாய ஆவணமாகும். மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் ஆதார் உடன் இணைத்துள்ளது. 54 அமைச்சகங்களின் சுமார் 311 மத்திய திட்டங்கள் ஆதாரை பயன்படுத்தி நேரடி பயன் பரிமாற்ற (DBT) தளத்தின் கீழ் வருகின்றன.


பி.எம் கிசான் நிதி யோஜனா போன்ற, விவசாயிகளுக்காக (Farmers) அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்கள் ஆதார் தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் கீழ் சுமார் 4 கோடி விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் பெறுகிறார்கள். ஆதார் சரிபார்ப்பு என்பது ஒரு திட்டத்தின் பயனாளியை சரியாக அடையாளம் காண ஆதார் எண்ணை பயன்படுத்தப்படுவதாகும்.


ALSO READ: PAN Card: எந்த ஆவணமும் கொடுக்காமல், இலவசமாக பான் அட்டை பெறலாம், வழிமுறை இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR