இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்கப்பட உள்ளதாக அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி அமைப்பு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர். 


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு  ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்கப்படும் என அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதியின் மகாராஷ்டிரா மாநில ஒருங்கிணைப்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.