நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் குழந்தையின் கண்முன் கசமுசா செய்த ஜோடி.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் குழந்தையின் கண்முன் உடலுறவு மேற்கொண்ட இளம் ஜோடியின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் இடம் பொருள் பாராமல் வைத்து உடலுறவு மேற்கொள்வார்கள். 


இந்நிலையில், ஒரு இளம் ஜோடி நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும்போதே செக்ஸ் உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்துள்ளனர். அதற்காக அவர்கள் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்கும் வண்ணம் இருந்துள்ளது. அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது உடலுறவு மேற்கொள்ளும் மனநிலைக்கு வந்த ஒரு தம்பதி ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


இதனால், உடலுறவு ஆசையை அடக்க முடியாத அவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே தங்களது "சேட்டை"யை செய்ய துவங்கிவிட்டனர். அந்த விமானத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை நிறுத்தவில்லை. விமானப்பணி பெண்கள் அவர்களிடம் சென்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் செய்யும் "சேட்டை"யை நிறுத்துவதாக இல்லை. இதனால் குழந்தைகளுடன் வந்திருந்த மற்ற பயணிகளுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. 


இதையடுத்து அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் எல்லாம் வேறு சீட்டில் அமர வைக்கப்பட்டனர். அதன் பின்பும் அவர்கள் அதை தொடர்ந்து கொண்டிருந்தததால் விமானப்பணி பெண்கள் அவர்களை சுற்றி கர்டன் வைத்து அவர்கள் செய்வது மற்றவர்களுக்கு தெரியாத படி பார்த்துக்கொண்டனர். 


பின்னர் விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நடுவானில் பறக்கும் விமானத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.