7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கப் போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படியில் பெரும் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம், அதாவது செப்டம்பர் மாதம் வரக்கூடும். மொத்தத்தில் இந்த மாதம் மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கின்றது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு இந்த மாதம் ஒப்புதல் அளிக்கலாம் என்று வட்டாரங்காள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்கு சதவீத டிஏ அதிகரிப்பு 


மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் மூன்று முதல் நான்கு சதவீதம் வரை திட்டவட்டமான அதிகரிப்பு இருக்கும். ஜனவரி முதல் ஜூன் வரையிலான பணவீக்கத் தரவுகளின்படி இந்த உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, அதன் பின்னரே அதிகாரப்பூர்வமாக இது பற்றி அறிவிக்கப்படும்.


உயர்த்தப்பட்ட டிஏ ஜூலை முதல் அமலுக்கு வரும்


ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை வந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் டிஏ தோராயமாக நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்றே குறலாம். எனினும், இதுபற்றி அரசு முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. அரசாங்கம் இந்த அறிவிப்பை அளித்தவுடன் தான் அகவிலைபப்டி அதிகரிப்பு குறித்த தெளிவு நமக்கு கிடைக்கும். மத்திய ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு பின், மொத்த அகவிலைபப்டி 46 சதவீதமாக உயரும். 3 சதவீதம் அதிகரித்தால் அது 45 சதவீதமாக இருக்கும். AICPI குறியீட்டின்படி, ஜூன் 2023 -க்குள் ஊழியர்களின் டிஏ 46 சதவீதத்தை எட்டியுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை முதல் அமலுக்கு வரும். 2 மாத டிஏ அரியர் தொகையும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும்.


ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?


மேலும் படிக்க | பெண்களை லட்சாதிபதியாக்கும் ஜாக்பாட் சேமிப்பு திட்டம்: அதிரடி காட்டும் மாநில அரசு!!


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் இந்த அளவு உயர்வு இருக்கும் (46% டிஏ உயர்வு)


சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
குறைந்தபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 18,000)


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ.8280/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (42%) - ரூ.7560/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 8280-7560= ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720X12 = ரூ 8640


அதிகபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 56,900)


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் -  ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ 26,174/மாதம்
3. இதுவரை அகவிலைப்படி (42%) - ரூ 23,898/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 26,174-23,898= ரூ 2276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2276X12 = ரூ 27312


அரியர் தொகை


ஜுலை முதல் அகவிலைப்படி அதிகரிப்பு பொருந்தும் என்பதால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான அரியர் தொகையும் ஊழிய்ரகளின் சம்பளத்தில் சேர்ந்து வரும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, அரியர் தொகை என மொத்தத்தில் ஊழியர்களுக்கி பம்பர் சம்பள உயர்வு இருக்கும்.


மேலும் படிக்க | EPFO: உங்கள் சம்பளத்தில் PF பிடித்தம் செய்யப்பட்டால், இந்த செய்தியை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ