7வது ஊதியக்குழு, சமீத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் வாரங்களில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அகவிலைப்படி உட்பட இன்னும் பல ஏற்றங்கள் ஏற்பட உள்ளன. இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்பட உள்ளது. ஊழியர்களின் ஊதியத்தில் எந்தெந்த காரணிகளால் ஏற்றம் ஏற்படும் என்ற தகவலை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு நல்ல செய்திகள்


மத்திய அரசு விரைவில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அதிகரிக்கவுள்ளது. இதனுடன் ஊழியர்களுக்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மோடி அரசு இப்போது விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், இந்த இரட்டை அதிகரிப்புகள் நடந்தால், அது அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசாக கருதப்படும். 


அகவிலைப்படியில் ஏற்றம்


அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். இது மொத்த சம்பளத்தில் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஊழியர்கள் தற்போது 42 சதவிகித அகவிலைபப்டியை பெற்று வருகிறார்கள். 


அகவிலைப்படி அதிகரிப்பு ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், அதன் அறிவிப்புக்காக நாம் சிறிது காத்திருக்க வேண்டும். இது செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம். மத்திய ஊழியர்களுக்கு ஜூலை முதல் அறிவிக்கப்படும் வரை நிலுவைத் தொகை (DA Arrears) வழங்கப்படும்.


சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
குறைந்தபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 18,000)


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ.8280/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (42%) - ரூ.7560/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 8280-7560= ரூ 720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720X12 = ரூ 8640


அதிகபட்ச அடிப்படை சம்பள கணக்கீடு (ரூ 56,900)


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் -  ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (46%) - ரூ 26,174/மாதம்
3. இதுவரை அகவிலைப்படி (42%) - ரூ 23,898/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 26,174-23,898= ரூ 2276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2276X12 = ரூ 27312


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு டபுள் பம்பர் ஜாக்பாட்.. அடுத்த மாதம் ஊதிய உயர்வு


ஃபொட்மெண்ட் ஃபாக்டரில் அதிகரிப்பு


ஊழியர்கள் நீண்ட காலமாக ஃபிட்மென்ட் பேக்டரை அதிகர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது நடந்தால் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். ஃபிட்மென்ட் பேக்டர் மற்றும் டிஏ அதிகரிக்கும் தேதியை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வரும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2016 இல் அதிகரிக்கப்பட்டது


2016 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழு அரசால் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாவது ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அவர்களது குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு காணப்பட்டது. அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணியாளர் மூன்று மடங்கு வரை ஊதிய உயர்வு பெறலாம் என நம்பப்படுகின்றது.


சம்பள உயர்வு அதிகமாக இருக்கும்


ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 3 மடங்கு உயர்த்தப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் ரூ.26,000 வரை அதிகரிக்கலாம். ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால், சம்பள உயர்வுடன், அகவிலைப்படி, பயணப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட அடிப்படை சம்பள உயர்வுகளும் பதிவு செய்யப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. அடுத்த மாதம் அறிவிப்பு, பம்பர் ஊதிய உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ