7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி அதிகரிப்பு


ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி 3 அல்லது 4 சதவிகிதம் அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடலாம்.  மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்து 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபுறம் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும் என மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.


அகவிலைப்படி உயர்வு: எந்த மாதம் முதல் அமலுக்கு வரும்?


மத்திய அரசு ஊழியர்களின் புதிய டிஏ உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆக இருந்து அவரது அடிப்படைச் சம்பளம் ரூ. 15,000 எனில், அவர் ரூ.6,300 -ஐ அகவிலைப்படியாகப் பெறுவார். இது அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் 42 சதவீதமாக இருக்கும். இருப்பினும், 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருந்தால், ஊழியர்களின் சம்பளம் ரூ.6,750 அதிகரிக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. சம்பள உயர்வு, ரூ.95680 கணக்கில் வரும்


அகவிலைப்படி வருடத்திற்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது


மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இருமுறை செய்யப்படுகிறது. மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். தற்போது, அதன் புதிய தரவுகளின்படி, ஜூலை 2023க்கான CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7ஐ எட்டியுள்ளன. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2.42 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், ஓராண்டுக்கு முன், இதே மாதத்தில், இந்த தரவு 0.90 சதவீதம் அதிகரித்திருந்ததுது.


ஊழியர்கள் தற்போது எவ்வளவு அகவிலைப்படியை பெறுகிறார்கள்?


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது. இரண்டும் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்படுகிறது.


ஜூலை ஏஐபிசிஐ குறியீட்டில் முன்னேற்றம்


2023 ஜூலை மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் நேற்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டன. இந்த குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூலை, 2023க்கான அகில இந்திய ஏஐசிபிஐ CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ளது. இதுவே, ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளாகவும் மே மாதத்தில் குறியீட்டு எண் 134.7 புள்ளிகளாகவும் இருந்தன.


தற்போது 2023க்கான அகில இந்திய ஏஐசிபிஐ CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ள நிலையில், ஜனவரி முதல் மத்திஅ அரசு ஊழியர்களுக்கு 50 சதவிகித டிஏ அமலுக்கு வரும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | 7th Pay Commission: செப்டம்பர் 15 முதல் DA உயர்வு? ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ