பிரிட்டிஷ்-யை சேர்ந்த 61 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட 26 வயது இளைஞர்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் பெரும் பணக்காரர்களில் ஒருவர் 61 வயது டயான் டி சோய்சா. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது, இலங்கையை சுற்றி காண்பிக்க தனக்கு ஒரு உள்ளூர்வாசியை தேர்வு செய்ய நினைத்த டயன் டீக்கு பிரியஞ்சன் டி ஸோசா என்ற 26 வயது இளைஞன் கிடைத்துள்ளார். 


அந்த இளைஞனும் இந்த பெண்ணை இலங்கையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளான். சென்ற இடங்களில் எல்லாம் டயன் டீ, பிரியஞ்சனிற்காக அதிகமாக செலவு செய்துள்ளார். அதை பார்த்த பிரியஞ்சன் டயன் டீயிடம் இருந்து காசுகளை கறக்க அன்பாக பேசி பழகி வந்துள்ளான். 


இவன் அன்பாக பேசுவதை பார்த்து மயங்கிய டயன் டீ, பிரியஞ்சனின் மீது காதலில் விழுந்தார். சுற்றுலா முடிந்து ஸ்காட்லாந்து திரும்பிய டயன் டீக்கு தனது 26 வயது காதல் பிரியஞ்சனை விட்டு விட்டு இருக்க முடியாமல் அவர் ஸ்காட்லாந்தை காலி செய்து விட்டு இலங்கையில் வந்து செட்டிலானார். 


அங்கு பிரியஞ்சனுடன் சேர்ந்து வாழ துவங்கினார். தன்னுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் பிரியஞ்சனிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விபரம் டயன் டீக்கு தெரிந்தது. இருந்தாலும் அவருக்கு பிரியஞ்சனின் மீது உள்ள காதலால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் தன் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் பிரியஞ்சனை சக நண்பன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். இதனால் பிரியஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். 


இதையடுத்து, தான் பிரியஞ்சனும் தன்னிடம் காசுக்காக மட்டுமே பழகியுள்ளான் என்பதை டயன் டீ உண்ர்ந்த மீண்டும் ஸ்காட்லாந்திற்கே ஓடிவிட்டார். இந்த சம்பவம் இணையத்தில் விரலாக பரவி வருகிறது.