கேக் வாங்கினால்....பெட்ரோல் இலவசமாக கிடக்கும்...! வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த தனியார் பேக்கரி தனித்துவமான வழியை கண்டறிந்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.


பெட்ரோல், டீசல் விலை இப்போது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. அதிகபட்சமாக இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 85.58 பைசாவுக்கும், டீசல் ரூ.78.10 பைசாவுக்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்கட்சிகள் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன.


சமீபத்தில், பெட்ரோல் விலை அதிகரிப்பு பல ஆச்சரியங்களை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் கடலூரில் நடந்த திருமண விழாவில், தம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோலை நண்பர்கள் அன்பளிப்பாக வழங்கினர். 


அதனை தொடர்ந்து, வேலூர் மாவட்டம், அண்ணாசாலையில் உள்ள ஒரு DC என்ற தனியார் பேக்கரி ஒரு அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். அதில் ஒரு கிலோ கேக் ரூ.495 எனவும், ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் எனவும் எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் ஆர்ச்சயத்துடன் பார்த்து செல்கின்றனர் இது வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தியாக தான் தோன்றுகிறது.