புதுடெல்லி: இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   


இன்றைய நாளுக்கான உங்கள் ராசிபலன் எப்படி உள்ளது? உங்கள் அதிர்ஷ்ட எண், நிறம் என்ன? இங்கே தெரிந்து கொள்ளலாம். 


ராசிபலன்  - 29-05-2021


மேஷம்:
உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.


ரிஷபம்:
புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனம் அமைதி பெறும்.


Also Read | தமிழ் பஞ்சாங்கம் 29 மே, 2021: வைகாசி 15ஆம் நாள்; சனிக்கிழமை


மிதுனம்:
கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி லாபம் மேம்படும்.


கடகம்:
உழைப்பிற்கேற்ற முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சிறு உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய வியூகங்களை கற்றுக்கொள்வீர்கள்.


சிம்மம்:
பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சிலருக்கு சாதகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.


கன்னி:
தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.


துலாம்:
உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


Also Read | Positive Angle of  Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்


விருச்சகம்:
மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.


தனுசு:
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும், நாட்டமும் ஏற்படும்.


மகரம்:
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியில் லாபம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


கும்பம்:
தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.


மீனம்:
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்டு வந்த நெருக்கடிகள் குறையும். மனைவி வழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.


 Also Read | சிவகுமரன் அறுமுகன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR