DA Hike: மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்து, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தி, 42 சதவீதத்திற்கு அதிகரிக்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்தார். அதாவது மத்திய பிரதேச அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையும் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 7 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், 'ஊழியர்களின் நலனுக்காக நாங்கள் நிறைய புரட்சிகர நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இப்போது, மத்திய அரசை போல 42 சதவீத அகவிலைப்படியை (4 சதவீத உயர்வுடன்) வழங்க முடிவு செய்துள்ளோம். கடந்த ஜனவரியில் இருந்து கணக்கிடப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இறந்தவர்களின் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்தால் உங்களுக்கு சிறை தான்!


எங்களின் அரசு எப்போதும் ஊழியர்களுக்கு இணக்கமான அரசாகவே இருந்து வருகிறது என்றும் அவர்  ஊழியர்களின் நலனுக்காக நாங்கள் பல புரட்சிகரமான முடிவுகளை எடுத்துள்ளோம் என்றும் அந்த ட்வீட் உடன் இணைக்கப்பட்ட அவர் பேசும் வீடியோவில் தெரிவித்துள்ளார். 



அந்த வீடியோவில், 'அண்மையில், மாநில ஊழியர்களுக்கு மத்திய அரசின் அகவிலைப்படி வழங்குவதாக நான் அறிவித்திருந்தேன், அதே வரிசையில், ஜனவரி முதல் மத்திய அரசுக்கு  இணையாக 42% அகவிலைப்படி வழங்க முடிவு செய்துள்ளோம். ஜனவரி முதல் ஜூன் 2023 வரை, நிலுவைத் தொகை 3 சம தவணைகளில் வழங்கப்படும். ஆறாவது ஊதிய விகிதத்தைப் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் அகவிலைப்படியும் விகிதாசாரப்படி உயர்த்தப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.


30 ஆண்டுகள் சேவை முடித்த மாநில அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய விகிதத்தை வழங்க 2014-ல் தனது அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். மேலும், ஜூலை 1, 2023க்குள் 35 ஆண்டுகள் பணி முடித்த அனைவருக்கும் நான்காவது முறை ஊதிய விகிதமும் வழங்கப்படும் என்றும் மாநில அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.


நிலுவைத் தொகை
 
இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக ஜனவரி முதல் ஜூன் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதிய விகிதத்தின் கீழ் உள்ள அனைத்து மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களும் அவர்களது அகவிலைப்படியில் விகிதாசார உயர்வைக் காண்பார்கள் என்று முதல்வர் கூறினார்.


இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவோம் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கு பதிலடியாக பாஜக அரசின் நடவடிக்கைகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | ஆன்லைனின் சமோசா ஆர்டர் செய்தது ஒரு குத்தமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ