கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, இட்லி சாப்பிடும் போட்டி வைக்கப்பட்டது. அப்போது ஒருவர் உயிரிழந்தார். அதாவது, இட்லி சாப்பிடும் போட்டியில் வெற்றி பெறுவதற்காக, அந்த நபர் ஒரே நேரத்தில் மூன்று இட்லிகளை விழுங்கியுள்ளார். இதனால் ஒரு இட்லி அந்த நபரின் தொண்டையில் சிக்கிக்கொள்ள மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக இறந்திருக்கிறார். இது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உணவை எப்படி சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | துணிகளில் உள்ள டீ அல்லது காபி கறைகளை இந்த வழியில் எளிதாக நீக்கலாம்!


ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது. அவசர அவசரமாக சாப்பிடுவதால் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிக்கொள்ளும். ஏனெனில் நீங்கள் உணவை விழுங்கும்போது, காற்றுக் குழாய் தன்னைத்தானே மூடிக்கொள்கிறது, இதன் காரணமாக உணவு உணவு குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்கிறது. அவசர அவசரமாக சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறந்து மூடுவதற்கான வாய்ப்பு குறைவு. அப்போது, உணவு சுவாச்க் குழாயில் சிக்கிக் கொள்கிறது. இதனால் அவசரசமாக உணவு சாப்பிடுபவர் மூச்சுத்திணறல் காரணமாக இறக்கலாம். இது மருத்துவத்தில் ஆஸ்பிரேட் என்று அழைக்கப்படுகிறது. 


நிபுணர்களின் இதுகுறித்து விளக்கும்போது, அவசரமாக யாராவது சாப்பிடும்போது உணவு பொதுவாக மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்கிறது. இதை மருத்துவத்தில் ஸ்பீட் ஈட்டிங் என்று சொல்வார்கள். ஒருவர் ஒரு நொடியில் நிறைய உணவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உணவை விரைவாக உண்ணும் போது, உணவு சுவாசக் குழாயில் சிக்கி வெளியே வர முடியாமல் போனால், மரணம் ஏற்படுகிறது. அதனால்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு சாப்பிடும்போது பேசக்கூடாது, மெதுவாக சாப்பிடுங்கள் என்று அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள்.


சாப்பிடும் போது உணவு தொண்டையில் சிக்கினால் என்ன செய்வது?


உணவு சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டால், அவருக்கு லேசான விக்கல் முதலில் வரும். பின்னர் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படும். உணவு உண்ணும் போது திடீரென விக்கல் வந்தால், தாமதிக்காமல் உடனடியாக 2 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது தவிர, உடனடியாக அருகில் அமர்ந்திருப்பவரை உங்கள் முதுகில் தட்டச் சொல்லுங்கள். இது தேங்கிய உணவையும் நீக்குகிறது. இதற்குப் பிறகும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இது தவிர, படுத்திருக்கும் போது உணவு உண்ணக் கூடாது.


மேலும் படிக்க | காலை உணவைத் தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ