முடி வளர்ச்சிக்கான ரோஸ்மேரியின் நன்மைகள்: முடி உதிர்தல், முன்கூட்டிய நரைத்தல் மற்றும் பொடுகு ஆகியவை பொதுவான முடி பிரச்சினைகளாகும். வயது வித்தியாசமின்றி பெரும்பாலான மக்கள் மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக முடி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் இந்த தலைமுடி பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு பெற பலர் கெமிக்கல் மருத்துகளை உண்ணத் தொடங்குகின்றனர். எனவே இது போன்ற கெமிக்கல் நிறைந்து மாத்திரைகள், ஷாம்புகளை பயன்படுத்துவற்கு பதிலாக சில வீட்டு வைத்தியங்களை ட்ரை செய்யலாம். ஏனெனில் சில நேரங்களில் இந்த வீட்டு வைத்தியங்கள் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைத் தரக்கூடும். எனவே, முடி உதிர்தல் அல்லது நரை முடி பிரச்சனைகளை சமாளிக்க ரோஸ்மேரி எண்ணெய்யை தலையில் பயன்படுத்தி பாருங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோஸ்மேரி தண்ணீர் | Rosemary water:
உங்கள் கூந்தலை நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்ற வேண்டுமானால், ரோஸ்மேரி தண்ணீரைப் பயன்படுத்தலாம். இந்த தண்ணீர் பல ஊட்டச்சத்து குணங்களை கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் கூந்தலை பலப்படுத்துவதுடன், உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியையும் தடுக்க உதவுகிறது.


ரோஸ்மேரியின் நன்மைகள் | Benefits of rosemary:
ரோஸ்மேரி ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். 'குல் மெஹந்தி கா டெல்' என்று பிரபலமாக அழைக்கப்படும் ரோஸ்மேரி எண்ணெய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் மருத்துவ குணங்களுக்காக பெயர் பெற்றது. அதேபோல் ரோஸ்மேரியானது ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக உடைந்த, வறண்ட சேதமடைந்த கூந்தலை சரிசெய்ய உதவும். இந்த ரோஸ்மேரியை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தி வந்தாக. முடி வளர்ச்சி அடையத் தொடங்கும். இந்த எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக முடி வளர்ச்சிக்கான மயிர்க்கால்கள் உதிர்வதை தடுக்கிறது. 


மேலும் படிக்க | Cervical Cancer: கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் இவைதான்!


ரோஸ்மேரி வாட்டர் செய்வது எப்படி | How to make rosemary water: 
வீட்டிலேயே ரோஸ்மேரி தண்ணீரை தயாரிக்க முதலில் ரோஸ்மேரி இலைகள் ஃபிரஷ்ஷாகவும் கிடைக்கும். உலர்ந்த நிலையிலும் கிடைக்கும். இரண்டில் ஏதாவது ஒன்றை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த இலைகளைப் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பின்பு அடுபபை அணைத்துவிட்டு ஆறவிடுங்கள். நன்கு ஆறியதும் இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இந்த தண்ணீர் முடியின் வேர்களில் தடவவும். குறிப்பாக இரவு தூங்கும் முன் தடவி வந்தால் பலன் கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தாலே போதும். தலைமுடி நல்ல வளர்ச்சி அடையும். அதேபோல் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் ரோஸ்மேரி தண்ணீரை கலந்து அப்ளை செய்தும் குளித்து வரலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Bone Health: இதையெல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க... எலும்பு வீக் ஆயிடும் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ