தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையானவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நேற்று நடிகை தமன்னா ஐதராபாத்தின் ஹிம்யாத் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார். அப்போது திறப்பு விழா முடிந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு, அதிருஷ்டவசமாக தமன்னாவின் மீது படவில்லை. 


இதை பார்த்து போலீசாரும், ரசிகர்களும் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த நபரின் பெயர் கரிமுல்லா என்றும், முசீராபாத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி என்றும் தெரியவந்தது. 


விசாரனையில் செருப்பு வீச காரணம் என்னவென்று கேட்டதற்கு நடிகை தமன்னாவின் சமீபத்திய படங்களில் அவரது கதாபாத்திரங்கள் மீது ஏற்பட்ட அதிருப்தி தான் காரணமாக என கூறியுள்ளார். 


இதைத்தொடர்ந்து கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில் கரிமுல்லாவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.