சத்திஸ்கரின் பிலாஸ்பூர் அருகே உள்ள அணை ஒன்றில், பெரும் வெள்லம் ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரு நபரை இந்திய விமான படை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் சுமார் 16 மணி நேரம் வெள்ள நீரின் நடுவில் சிக்கிக் கொண்டிருந்தார்.


அவரை காப்பாற்றிய இந்திய விமானப்படை காப்பாற்றிய  பிறகு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.



விமான படையினர் அவரை காப்பாற்றும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது,



 முன்னதாக அவரை காப்பாற்ற மாநில போலீஸ் குழு முயன்றது. ஆனால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே அவர்கள் இந்திய விமானப்படையின் உதவியை நாடினர்.


இன்று காலை 5.49 மணிக்கு ஹெலிகாப்டர் சம்பவ இடத்தை அடைந்தது. 6.37 மணிக்கு அவர் மீட்கப்பட்டார்.


ALSO READ | Watch Viral Video: மழைக்கு பெஞ்சின் அடியில் ஒதுங்கி இளைப்பாறிய முதலை!!!