தான் காதலித்த பெண்ணையும், தனது வீட்டில் பார்த்த பெண்ணையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட CRPF வீரர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா என்பவர் CRPF வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது ஆனால் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் விடுமுறைக்காக அணில் தனது சொந்த ஊருக்கு வரும் போது எல்லாம் அவர் வீட்டில் அருகே உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். தன் மனைவியை விட அந்த பெண்ணுடன் தான் அதிக நேரத்தை செலவு செய்துள்ளார். 


இந்நிலையில் தன் மனைவி மூலம் குழந்தை பிறக்காததால் அணில் தன் அங்கன்வாடி காதலியை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது முதல் மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரோ முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் தனது காதலியையும் மனைவியையும் ஒரே மேடையில் வைத்து இருவரையும் திருமணம் செய்தார். அதாவது மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். இந்த செய்தி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இது குறித்து CRPF அதிகாரி கூறுகையில், சட்டப்படி முதல் மனைவி இருக்கும்போது அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக திருமணம் செய்வது தவறு. அரசு ஊழியர்கள் இவ்வாறு செய்ய அனுமதியில்லை. அவர் எந்த ஜாதி ,மதம், என யாராக இருந்தாலும் தனக்கு திருமணமான பின் தனது துணை இருக்கும்போது வேறு ஒருவரை மணக்க முடியாது என தெரிவித்துள்ளார்.